கும்மிடிப்பூண்டி: புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள வீட்டை மர்ம நபர்கள் உடைத்து 9 சவரனை கொள்ளை அடித்து சென்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (55) கார்பெண்டர். இவர், நேற்றுமுன்தினம் இரவு அருகே உள்ள அவருடைய மகள் வீட்டுக்கு இரவு படுக்க சென்றுள்ளார். மீண்டும் காலை தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.