ஆவடி: மஞ்சள் நீராட்டு விழாவில் சிறுமி நெஞ்சு வலியால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆவடி அடுத்த வாணியச்சத்திரம் கொடுவெள்ளி சுப்பு நகரை சேர்ந்தவர் கார்த்திக் (37) . கட்டிட தொழிலாளி. இவருக்கு 12 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், இவருக்கு நேற்று மஞ்சள் நீராட்டு விழாவிற்கு பெற்றோர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். உறவினர்கள் அனைவரும் வந்திருந்த நிலையில் காலை 5 மணி அளவில், சிறுமிக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனை தொடர்ந்து, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக போரூர் எஸ்.ஆர்.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.