துணிக்கடையில் புகுந்த பாம்பு

அம்பத்தூர்: கொரட்டூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (40), கொரட்டூர் சிக்னல் அருகே துணிக்கடை  நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கடையில் வியாபாரம் முடித்துவிட்டு கடையை மூடுவதற்காக  கடையின் ஷட்டரை ஊழியர்கள் இழுத்துள்ளனர். அப்போது, ஷட்டரில் ஒளிந்திருந்த 6 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு கீழே விழுந்தது. இதை பார்த்து ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். பின்னர், அந்த பாம்பு கடைக்குள் புகுந்தது. இதுபற்றி கடை உரிமையாளர் உடனடியாக அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில், விரைந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு  வீரர்கள்  கடையில் புகுந்த 6 அடி நீளம் கொண்ட  பாம்பினை ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி பிடித்தனர். பின்னர்,  அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.

Related Stories: