அம்பத்தூர்: நன்னடத்தை விதிமீறிய ரவுடிகள் இருவருக்கு 125 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பெரம்பூர் ராஜிவ்காந்தி தெருவை சேர்ந்தவர்கள் அருப்பு அப்பு (34) மற்றும் இமானுவேல் (21). இவர்கள் மீது ஐ.சி.எப் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, அடிதடி, கொலை என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், திருந்தி வாழப்போவதாக கூறி துணை ஆணையர் ராஜாராமிடம் சமீபத்தில் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தனர்.