நடத்தை விதிமீறிய 2 ரவுடிகளுக்கு 125 நாள் சிறை

அம்பத்தூர்: நன்னடத்தை விதிமீறிய ரவுடிகள் இருவருக்கு 125 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பெரம்பூர் ராஜிவ்காந்தி தெருவை சேர்ந்தவர்கள் அருப்பு அப்பு (34) மற்றும் இமானுவேல் (21).  இவர்கள் மீது ஐ.சி.எப் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, அடிதடி, கொலை என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், திருந்தி வாழப்போவதாக கூறி துணை ஆணையர் ராஜாராமிடம் சமீபத்தில் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தனர்.

ஆனால், அதை மீறி கடந்த மாதம் 21ம் தேதி குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் போலீசர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், நன்னடத்தை விதிமீறி குற்றச் செயலில் ஈடுபட்டதால், ஐ.சி.எப் காவல் ஆய்வாளர் பரணிதரன் பரிந்துரையின் பேரில் அருப்பு அப்பு மற்றும் இமானுவேல் ஆகிய இருவருக்கும் 125 நாட்கள் சிறை தண்டனை விதித்து துணை ஆணையர் ராஜாராம் உத்தரவிட்டார். அதன்படி, நேற்று இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: