திருவனந்தபுரம்: 2001ல் தனது 18வது வயதில் தெலுங்குப் படம் சீனு வசந்தி லக்ஷ்மி படத்தில் அறிமுகமானார் பத்மப்ரியா. தொடர்ந்து மம்மூட்டியின் மனைவியாக , ஒரு சிறுமியின் தாயாக மலையாள காழ்ச்சா படத்தில் அவர் நடித்தார். தமிழில் தவமாய் தவமிருந்து படத்தில் சேரன் அவரை அறிமுகப்படுத்தினார். பள்ளியில் பிளஸ் 2 படிக்கும்போது, அழகிப்போட்டியில் கலந்துகொண்டார். மிஸ் ஆந்திராவாக தேர்வானார். அதன் மூலம்தான் பத்மபிரியாவுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. நடிப்பில் பிஸியாக இருந்தபோது அமெரிக்கா சென்று நியூயார்க் யூனிவர்சிட்டியில் டிகிரியை முடித்தார்.