பெங்களூரு: நேஷனல் ஹெரால்டு வழக்கில் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், அவரின் தம்பியும் எம்பி.யுமான சுரேஷிடம் அமலாக்கத் துறை நேற்று விசாரணை நடத்தியது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் பணம் பரிமாற்றம் செய்ததில் முறைகேடு நடந்துள்ள புகாரில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரிடம் விசாரணை நடத்த நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. அதையேற்று நேற்று டெல்லி சென்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு அவர் ஆஜரானார். அப்போது அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். மேலும் இவ்வழக்கு தொடர்பாக தேவைப்படும் ஆவணங்களை தாக்கல் செய்வதாகவும் கூறினார். அதை தொடர்ந்து விசாரணை முடிந்து வெளியில் வந்தார்.