புதுடெல்லி: மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, எஸ்சி அந்தஸ்து வழங்குவது பற்றி ஆராய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்த மக்கள் இந்துவில் இருந்து இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களுக்கு மாறினால், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பறிக்கப்படுகிறது. மேலும், தாழ்த்தப்பட்டோர் என்ற அந்தஸ்தையும் அவர்கள் இழக்கின்றனர். இந்நிலையில், மதம் மாறியபோதிலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது.