போபால்: நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப் புலிகளில் ஒன்று கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய காடுகளில் இருந்த சிவிங்கிப் புலிகள் 70 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டன. இந்த வேட்டை விலங்கினத்தை இந்தியாவில் மீண்டும் உருவாக்க, ‘சிவிங்கிப் புலி திட்டம்’ என்ற புதிய திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தி இருக்கிறது. இதற்காக, நமீபியா நாட்டில் இருந்து தனி விமானத்தில் 8 சிவிங்கிப் புலிகள் கொண்டு வரப்பட்டு, மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ உயிரியல் பூங்காவில் கடந்த மாதம் தனது பிறந்த நாளான 17ம் தேதி பிரதமர் மோடி திறந்து விட்டார்.