லண்டன்: உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக நிலவும் எரிவாயு பற்றாக்குறை நெருக்கடியான நிலையை எட்டும்பொழுது, இங்கிலாந்தின் ஒருசில பகுதிகளில் 3 மணி நேரம் வரை மின்சார தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இங்கிலாந்து தேசிய மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இங்கிலாந்து மக்கள் அதிகமாக மின்சாரம் உபயோகிக்க கூடிய உபரணங்களான வாஷிங் மெஷின், டிஷ்வாஷர் மற்றும் டிரையர் போன்ற உபகரணங்களை அனைவரும் பயன்படுத்த கூடிய பகல் நேரங்களில் பயன்படுத்தாமல் இரவு நேரத்தில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.