மும்பை: பாலிவுட் மூத்த நடிகர் அருண் பாலி என்பவர், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று இறந்தார். பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் அருண் பாலி (79), மும்பை புறநகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார். அவர் ஏற்கனவே நரம்பு மற்றும் தசை பிடிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், மயஸ்தீனியா கிராவிஸ் என்ற ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவரது மகன் தெரிவித்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தொடர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறினார். அருண் பாலியின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.