சுற்றுலா பயணிகளை கவரும் காட்டு டேலியா மலர்கள்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்களில் பூத்துள்ள காட்டு டேலியா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், இங்கு ஏராளமான சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் ஆகிய உள்ளன. இந்த பூங்காக்களில் பல வகையான மலர்கள் மற்றும்  அழகு தாவரங்கள் காணப்படுகிறது. இதனை வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இது ஒரு புறம் இருக்க நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது வனங்களில் காணப்படும் சில மலர்கள் பூப்பது வழக்கம்.

இவைகள் மிகவும் அழகாக  காணப்படும். இதில், காட்டு சூரியகாந்தி மலர்கள், காட்டு டேலியா மலர்கள், சேவல் கொண்டை, எவர்லாஸ்ட் மலர்கள், செர்ரி, ஜெகரண்டா மலர்கள் போன்றவை. இவைகள் சாலையோரங்களில் அந்தந்த சீசன்களில் பூத்துக் காணப்படும். இவைகளை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, அதனை புகைப்படமும் எடுத்துச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், தற்போது நீலகிரி  மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சாலையோரங்களில் காட்டு டேலியா மலர்கள் அதிகளவு பூத்துள்ளன. ஊட்டியில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலையோரங்களில், மஞ்சூர் செல்லும் சாலையோரங்களிலும் இந்த மலர்கள் பல இடங்களில் பூத்துக் காணப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, அதனை புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.

Related Stories: