திண்டுக்கல்:திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் டீக்கடை மற்றும் உணவுகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அலுவலருக்கு தகவல் வந்தது. இதன்படி உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை நியமன அலுவலர் சிவராம பாண்டியன் உத்தரவின் பேரில் நேற்று காலை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் செல்வம் தலைமையிலான ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.