உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டி கிராமத்தில் 17, 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாமனன் உருவம் பொறித்த எல்லைக்கல் கண்டறியப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டி கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 17, 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாமனன் உருவம் பொறித்த எல்லைக்கல் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 2 அடி உயரத்தில் உள்ள இந்த கல்லில் ஒன்றரை அடிக்கு வாமனன் உருவம் பொறிக்கப்பட்டு நடப்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கூறுகையில், பெரும்பாலும் சிவன் கோவில்களுக்கு சொந்தமான இடங்களின் எல்லையை குறிக்கும் நோக்கில் சூலாயுதம் பொறித்த எல்லை கல் நடப்படுவது வழக்கம்.