சென்னை: கிண்டியில் ஏசி கம்ப்ரசர் வெடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பலியாகினர். கிண்டி அம்பேத்கர் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பழுதடைந்த குளிர்சாதன பெட்டியினை பழுதுபார்க்க கடந்த 30ம் தேதி, ஜாபர்கான் பேட்டையில் ஏசி பழுது பார்க்கும் கடை நடத்தும் சின்னதுரை(45) என்பவர் தன்னுடன் வேலை பார்க்கும் மதுரவாயலை சேர்ந்த இந்திரகுமார்(40), கோடம்பாக்கத்தை சேர்ந்த சரவணன் (41) ஆகியோருடன் அந்த தனியார் நிறுவனத்தில் பழுது பார்க்க சென்றனர். 3வது மாடியில் இருந்த ஏசி அவுட்டோர் கம்ப்ரசரை பழுதுபார்த்தபோது காஸ் கசிந்து வெடித்தது.