புழல்: கஞ்சா விற்பனை பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்த தனியார் டிவி நிருபரின் பைக்கை மர்ம நபர்கள் தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புழல் அருகே அறிஞர் அண்ணா நகரை சேர்ந்தவர் கிறிஸ்துராஜன். இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் டிவி நிருபராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், அறிஞர் அண்ணா நகர் பகுதியில் சிலர் கஞ்சா பதுக்கி வைத்து, அப்பகுதியை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்தனர்.