சிறுமிக்கு பாலியல் தொல்லை ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை

கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (57). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 24.11.2021ல் 10 வயது மாணவிக்கு அசோக்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் புகாரின்படி சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அசோக் குமாரை கைது செய்தனர். இந்த வழக்கை கடலூர் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழிலரசி விசாரித்து அசோக்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மேலும் கடலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், சிறுமிக்கு ரூ.2 லட்சத்தை இழப்பீடாக 30 நாட்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டார்.

Related Stories: