நடிகை தந்தையின் வீட்டு கதவு உடைப்பு: தாய் மீது போலீசார் வழக்கு பதிவு

பெங்களூரு: கன்னட நடிகை ஸ்ரீலீலாவின் தாயார் சுவர்ணலதா, சமீபத்தில் பெங்களூரு புறநகரிலுள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் புகுந்து தகராறு செய்ததாகவும், பிறகு அங்கு இருந்த ஊழியர்களை தனது அடியாட்கள் மூலம் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக சுவர்ணலதாவின் மீது ஆனேக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மற்றொரு சம்பவமாக, சுவர்ணலதாவின் கணவர் சுபாகர் ராவ், கோரமங்களாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், அடியாட்களுடன் குடியிருப்புக்கு சென்ற சுவர்ணலதா, தனது கணவர் வசிக்கும் வீட்டு கதவை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்து, வீட்டில் இருந்த சில முக்கிய ஆவணங்கள் மற்றும் சொத்துப் பத்திரங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தனது மனைவி மீது ஆடுகோடி போலீஸ் நிலையத்தில் சுபாகர் ராவ் புகார் அளித்தார். அதன்பேரில், சுவர்ணலதா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  லீலாவின் தாய் சுவர்ணலதா தனது கணவரின் வீட்டு கதவை உடைக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Related Stories: