மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே நடத்திய ஏட்டிக்கு போட்டி தசரா பேரணிகளில், ஷிண்டேவுக்கு 2 லட்சம் பேரும், தாக்கரேவுக்கு ஒரு லட்சம் பேரும் திரண்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மகாராஷ்டிராவில் சிவசேனாைவ உடைத்து, பாஜ ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ள முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எல்லா வகையிலும் குடைச்சல் கொடுத்து வருகிறார். உண்மையான சிவசேனா தாங்கள் தான் என்பதை நிரூபிக்க, இருவரும் தங்களின் தொண்டர்கள் பலத்தை ஒவ்வொரு கூட்டத்திலும் காட்டி வருகின்றனர். இதனால், சிவசேனா கட்சி ஷிண்டே அணி, தாக்கரே அணி பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில், உத்தவ் தரப்பில் சிவாஜி பார்க்கிலும், ஷிண்டே தரப்பில் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்சிலும் நேற்று முன்தினம் தசரா பேரணி நடத்தப்பட்டது.