வில்லியனூர்: பியூட்டி பார்லரில் வேலை முடிந்து இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, வில்லியனூரை அடுத்த மங்கலம் நத்தமேடு பகுதியை சேர்ந்த இளம்பெண் (27 வயது), நகர பகுதியில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து இரவு 8 மணியளவில் நத்தமேடு பஸ்நிறுத்தம் வந்து இறங்கி வீட்டிற்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். இருட்டான பகுதியில் நின்றிருந்த 16 வயது சிறுவன் அவரை பின் தொடர்ந்துள்ளார். அவரை இளம்பெண் தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவன், அருகிலுள்ள கம்பளிக்காரன்குப்பம் கிராமத்துக்கு செல்வதாக கூறவே, அதை நம்பி உடன் நடந்துள்ளார். சிறிது தூரம் சென்றதும், அவன் இளம்பெண் கையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.