பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல்லிருந்து 36 கிமீ தொலைவில் வத்தலக்குண்டு உள்ளது. கடந்த 2010ல் ரூ.333.18 போடி மதிப்பில் திண்டுக்கல்-குமுளி வரையிலான இருவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. தற்போது இப்பணி பெருமளவில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்-வத்தலக்குண்டு இடையே சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் முட்செடிகளுக்கு பயந்து டூவீலர் ஓட்டுனர்கள் சாலையின் நடுவில் செல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக கனரக வாகனங்களில் சிக்கி டூவீலர் ஓட்டுனர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.