ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள ஜங்ஷன் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று வெளிமாநில குட்கா பொருட்கள் குப்பையாக கொட்டப்பட்டு கிடந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவ்வழியாக சென்ற போது வித்தியாசமான பொருட்கள் பாக்கெட்டுகளாக காணப்பட்டதால் ரயில் பயணிகளும் பொதுமக்களும் வேடிக்கை பார்த்தனர். அப்போது தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ரூ.10 ஆயிரம் மதிப்பிலான வெளிமாநில குட்கா பொருட்கள் குப்பையாக கொட்டி கிடந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வீசி சென்றவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.