வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே இடையூறாக இருந்த நிழற்கூடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலகம் எதிரே பல லட்சங்கள் செலவில் மாநகராட்சி வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான கட்டிட பணிகள் முடிந்துள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு கடைகள் ஏலம் விடப்படள்ளது. இதற்கிடையில் இந்த வணிக வளாகத்திற்கு செல்ல இடையூறாக இருந்த பயணிகள் நிழற்கூடம் இடித்து அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.