திருப்பூர்: திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் விடுதியில் கெட்டுப்போன உணவு உண்ட 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பூர் அருகே அவிநாசி அடுத்த திருமுருகன்பூண்டியில் ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் செயல்பட்டு வருகிறது. இங்கு 10க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். வழக்கம் போல் காலையில் விடுதியில் சிறுவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இதனை உண்ட சிறுவர்கள் சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளனர். உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்ட போது, 10 முதல் 13 வயது வரை உள்ள 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.