பொன்னமராவதி: பொன்னமராவதி பேரூந்து நிலையத்தில் இருந்து இரவு நேரத்தில் துவரங்குறிச்சிக்கு கூடுதல் பேரூந்து இல்லாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். பொன்னமராவதி சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஊர்களுக்கு வரும் பொதுமக்கள், அங்கிருந்து துவரங்குறிச்சிக்கு செல்ல இரவு 9 மணிக்கு மேல் பேருந்து இல்லாமல் பரிதவித்து உள்ளனர். இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு செவிசாய்க்க வில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி பொன்னமராவதியிலிருந்து வலையபட்டி, கேசராபட்டி, உலகம்பட்டி வழியாக துவரங்குறிச்சிக்கு இரவு 9மணிக்கு மேல் ஒரு பேரூந்து இயக்கவேண்டும்.