மதுரை: திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் பங்கு குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றசாட்டியுள்ளார். தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஒன்றாக அறிவித்த இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஒன்றை திறந்து வைத்துள்ளனர்; மதுரையில் செங்கல் மட்டுமே உள்ளது. நிதி விகிதம் குறைக்கப்பட்ட நிலையிலும் பிரதமர் பெயரிலேயே திட்டத்தை ஒன்றிய அரசு தொடர்ந்து நடத்துவதாக புகார் தெரிவித்தார். 60 சதவீதம் பங்குடன் தொடங்கப்படும் ஒன்றிய அரசின் பல திட்டங்களுக்கு படிப்படியாக நிதி குறைக்கப்பட்டுள்ளது.