சேலம்: சேலத்தில் குட்கா விற்பனை செய்ததாக இந்து முன்னணி தலைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீதரன். பெட்டிக்கடைகளுக்கு சிகரெட் விற்பனை செய்து வருகிறார். அதனுடன் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களையும் விற்று வருவதாக அம்மாபேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவரிடம் 8 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணை நடத்தியபோது, பொன்னமாபேட்டை அண்ணாநகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (எ) மாறா கிருஷ்ணமூர்த்தி (56) என்பவர், தனக்கு குட்கா பொருட்கள் கொடுத்ததாக தெரிவித்தார். கிருஷ்ணமூர்த்தி இந்து முன்னணியின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் சிகரெட் வியாபாரம் செய்வதுடன் குட்கா பொருட்களையும் விற்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீதரன் ஆகியோரை கைது செய்தனர்.