சிவகங்கை: சிவகங்கையில் ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கையில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.