கோத்தகிரி: ஆயுதபூஜை,விஜயதசமி, காலாண்டு பள்ளி விடுமுறையை ஒட்டி கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு காட்சி முனையில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இங்கு அமைந்துள்ள ஆழமான பள்ளத்தாக்குகள், ராக் பில்லர், பச்சை பசேல் என காட்சியளிக்கும் அடர்ந்த வனப் பகுதிகளையும், அதன் நடுவில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் தெங்குமரடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட குக்கிராமங்களையும், தமிழகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான பவானிசாகர் அணை மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட், அங்களா உள்ளிட்ட பகுதிகளையும் தொலைநோக்கி கருவி மூலம் கண்டு ரசித்து செல்வது வழக்கம். அதேபோல் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை தொடர் விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிந்திருந்தனர்.