திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் போதை ஊசிகள் மற்றும் போதை மாத்திரைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிற்க்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திண்டிவனம் ஏஎஸ்பி அபிஷேக் குப்தா மேற்பார்வையில் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 4 பேரை கைது செய்து போதை ஊசி, மாத்திரை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.