பெரியபாளையம் அருகே சோகம்; கட்டு விரியன் பாம்பு கடித்து அண்ணன் பலி; தம்பி சீரியஸ்: பெற்றோர் கதறல்

பெரியபாளையம்: கட்டு விரியன் பாம்பு கடித்ததில் பெரியபாளையம் அருகே  தில் அண்ணன் பரிதாபமாக இறந்தார். தம்பி, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெற்றோர் கதறினர். இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

பெரியபாளையம் அருகே ஆரணி, எஸ்.பி.கோவில் தெருவில் வசிப்பவர் பாபு. கூலி தொழிலாளி. இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ரமேஷ் (13), தேவராஜ் (10) என்ற மகன்களும் உள்ளனர். குடிசை வீட்டில் வசிக்கின்றனர். இ

தில் ரமேஷ், தேவராஜ் ஆகியோர் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்றிரவு 4 பேரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு, ரமேஷ், தேவராஜ் ஆகியோரை கடித்துள்ளது. இருவரும் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு பெற்றோர் எழுந்தனர். அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்தனர். இருவரையும் மீட்டு, வெங்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் ரமேஷ் பரிதாபமாக பலியானார். தேவராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில் ஆரணி போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: