பெங்களூரு: கர்நாடக வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த தமிழகத்தை சேர்ந்த டாக்டர் உட்பட 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் கோபிநத்தம் வனச்சரக பகுதிகளுக்குள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் ஏரிக்காடு பகுதியில் வசித்து வரும் மாரிமுத்து (27) என்பவர் நாட்டு துப்பாக்கி மற்றும் ஏர்கன்களுடன் சென்றுள்ளார். தமிழ்நாடு - கர்நாடகா மாநில வன எல்லை பகுதிகளான ஒகேனக்கல் மற்றும்
ஆலம்பாடி, செங்கப்பாடி பகுதிகளில் தனது நண்பர்களான நல்லாம்பட்டியை சேர்ந்த கவின்குமார் (27), விக்னேஷ் (25) ஆகியோரையும் அழைத்து சென்றுள்ளார். இவர்களில் கவின்குமார் என்பவர் மருத்துவ படிப்பை இந்த ஆண்டு முடித்துள்ளார்.