சென்னை: நமதுரிமை காக்கும் கட்சி பொது செயலாளர் டாக்டர் செங்கை பத்மநாபன் அறிக்கை: கடந்த 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்தது. பின்னர் அப்பேரணியை நவம்பர் 11ம் தேதி நடத்துவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதை பாராட்டுகிறேன். இதுதவிர, தமிழகத்தில் பிரிவினையை தூண்டும் சீமான் போன்ற சிலர், இந்து மதத்தையும் கடவுள்களையும் அவதூறாக பேசுவதை கண்டிக்கிறேன்.