மூணாறு: கேரளாவின் மூணாறு எஸ்டேட் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் புகுந்து கடந்த 2 நாட்களில் 10 மாடுகளை தாக்கி கொன்ற புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்துள்ளனர். கேரள மாநிலம் மூணாறில் உள்ள நயமக்காடு எஸ்டேட் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய புலி ஒன்று கடந்த 2 தினங்களில் 10 மாடுகளை தாக்கி கொன்றதால் மக்கள் பீதியில் உறைந்தனர். மேலும் கால்நடைகளை குறிவைத்து தாக்கி கொள்ளும் புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நயமக்காடு பகுதியில் புலியை பிடிக்க 3 இடங்களில் வனத்துறையினர் கூண்டு அமைத்தனர்.