சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை 2வது நாளாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த சில வாரங்களாகக் குறைந்து வந்தது நகைப்பிரியர்களுக்கும், நடுத்தரக் குடும்பத்தினருக்கும் ஓரளவு மகிழ்ச்சியை அளித்தது. தங்கத்தை ஆர்வத்துடன் வாங்கினர். அவ்வப்போது விலை உயர்ந்தாலும் தங்கம் விலை பெரிதாக மாறவில்லை. இந்நிலையில் இந்த வாரத்திலிருந்து தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அதன்படி நேற்று சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, சவரன் ரூ.38,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.