சென்னை மாநகராட்சியில் அக்.15க்குள் சொத்துவரி செலுத்தினால் 5% சலுகை: மேயர் பிரியா அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் அக்டோபர் 15ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் 5% சலுகை அளிக்கப்படும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார். 2ம் அரையாண்டுக்கான சொத்துவரியை அக்டோபர் 15ம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் சலுகை அளிக்கப்படும். 2021 -22 நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் மொத்தமாகவே ரூ.1,240 கோடி வரி வசூலாகியிருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டும் ரூ.945 கோடி வரி வசூலாகியுள்ளது.

Related Stories: