டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தராகண்ட்டின் மலை மாவட்டமான பவுரி கார்வாலில் நேற்று இரவு பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 46 பயணிகளுடன் சென்ற இந்த பேருந்து துமாகோட் பகுதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. அப்போது பேருந்து பல முறை உருண்டதால் அதில் இருந்த மக்கள் அலறினர். இதனை தொடர்ந்து மலை கிராமத்தினர் அளித்த தகவலை அடுத்து விரைந்து வந்த பேரிடர் மேலாண்மை படையினர் இரவு நேரத்திலும் பயணிகளை மீட்க முயற்சி மேற்கொண்டனர்.