சண்டிகர்: பஞ்சாப் சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றது. பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களை வாங்க பாஜ முயற்சி செய்து வருவதாக முதல்வர் பகவந்த் சிங் மான் குற்றம்சாட்டினார். எம்எல்ஏக்களை வளைக்க பாஜ கட்சி தலா ரூ.25 கோடி ரூபாய் வரை தருவதாக கூறியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில், சட்டப்ேபரவையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முதல்வர் மான் முடிவு செய்தார். அதன்படி கடந்த மாதம் 22ம் தேதி ஆம் ஆத்மி அரசு சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மை நிரூபிக்க தயாராக இருந்தது. சட்டப்பேரவையை கூட்டுவதற்கு ஆளுனர் அனுமதி மறுத்து விட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.