சென்னை: கோயிலுக்கு சென்றதை நோட்டமிட்டு, லேத் பட்டறை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம், 20 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கே.கே.நகர் கிழக்கு வன்னியர் தெருவை சேர்ந்தவர் முனுசாமி (49). இவர் அமைந்தகரையில் லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்துடன் அரக்கோணத்தில் உள்ள கோயிருக்கு சென்றார். அங்கிருந்து, இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.