பெரம்பூர்: போதைப் பொருட்களின் நடமாட்டத்தை குறைக்கவும், அதனை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சமீபகாலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொடுங்கையூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் கொடுங்கையூர் எழில் நகர் தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த 3 நபர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது.