சென்னை: அரும்பாக்கம், ஜெகநாதன் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (58). அறநிலையத் துறை அதிகாரியான இவர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை இவர், கோயம்பேடு ஜெய் நகரில் உள்ள ஒரு சலூன் கடையில் முடி வெட்டி விட்டு, வெளியே நிறுத்தி இருந்த தனது காரில் புறப்பட தயாரானார். அப்போது, அங்கு போதையில் வந்த நபர், காரின் மீது சரிந்து, வாந்தி எடுத்துள்ளார்.