கோபி: கோபி, கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் இருக்கையில் அமர்ந்து விசாரணை நடத்திய ரவுடியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி அருகே பெருந்தலையூர் பகுதியை சேர்ந்தவர் சகாபுதீன் (58). இவர் போலீசில் ஏட்டாக பணிபுரிந்தார். பணியின்போது பொது இடத்தில் தகராறு, மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல குற்ற செயல்களில் ஈடுபட்டார். இதனால் அவர் மீது கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சகாபுதீன் 2007ல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு காவல் துறை பதிவேட்டில் ரவுடியாக பதிவு செய்யப்பட்டார்.