சுசீந்திரம்: நாகர்கோவில் அடுத்த தெங்கம்புதூர் அருகே வீராகுபதியில் கிறிஸ்தவ சபை ஒன்றின் சார்பில் ஜெபக்கூடம் உள்ளது. இந்த சபையை ஒசரவிளையை சேர்ந்த ஜெபசிங் (35) நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் ஜெபக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது இந்து முன்னணி ராஜாக்கமங்கலம் ஒன்றிய பொது செயலாளர் சுரேஷ் தலைமையில் வந்த அமைப்பினர், ஜெபக்கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்தனர். அங்கிருந்தவர்களை தகாத வார்த்தையால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்படும் நிலை உருவானது.