சென்னை: சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய மருத்துவ மாணவி கைது செய்யப்பட்டார். பள்ளிக்கரணை அடுத்த நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் இமானுவேல்(40). இவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், தான் சார்ந்துள்ள மதம் குறித்து மதுஷியா(28), என்பவர் சமூக வலைதளத்தில் அவதூறான செய்திகளை பரப்பி வருவதாக கூறி இருந்தார். புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்முடிவில், அந்த பெண் இலங்கையை சேர்ந்த மதுஷியா என்பதும். இவர் பெங்களூருவில் தன் கணவர் அபினவ் குமார் சிங்குடன் வசிப்பதும், ரஷ்யாவில் மருத்துவம் படித்து வருவதும் தெரியவந்தது.