மருத்துவ படிப்புக்கு அக்.6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் மொத்தம் உள்ள 38 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5 ஆயிரத்து 50 எம்பிபிஎஸ் இடங்கள், 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்று விடும். மீதமுள்ள இடங்கள் மாநில அரசுக்கு கிடைக்கும். எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை tnhealth.tn.gov.in என்ற இணையதளத்திலும் tnmedicalselection.org என்ற இணையதளத்திலும் மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். இந்நிலையில் மருத்து படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மேலும், மூன்று நாட்களுக்கு நீட்டித்து அதாவது அக்டோபர் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இதுவை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: