×

தூய்மையில் சிறந்த நாடு என்ற சிறப்பினை தமிழ்நாடு பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே இந்த நிலைமை என்றால், வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டால் நிலைமை இன்னமும் மோசமாகிவிடும்.  இதன்மூலம் சுகாதார கேடுகள் ஏற்பட்டு, தொற்று நோய்கள் பரவும் சூழ்நிலை உருவாகும்.  இதன்மூலம், மக்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, முதலமைச்சர் இதில் தனி கவனம் செலுத்தி, மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் நிரம்பி வழியாத வகையில் உடனுக்குடன் அதில் உள்ள குப்பைகளை எடுக்கவும், தூய்மையின்மையால் வரும் நோய்கள் குறித்தும்,  தூய்மையின் முக்கியத்துவம் குறித்தும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தூய்மையில் சிறந்த நாடு தமிழ்நாடு என்ற சிறப்பினை பெறவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Tamil ,Nadu ,O. Panneerselvam , Tamil Nadu should get the distinction of being the cleanest country: O. Panneerselvam demands
× RELATED “ஓ.பன்னீர்செல்வம் மிகவும்...