பல்லடம்: பல்லடம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கொன்று, கணவன் தற்கொலை செய்து கொண்ட பயங்கரம் நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (55) இவரது மனைவி புஷ்பவதி (50) நேற்று காலை வழக்கம்போல இவர்கள் வீட்டிற்கு பால் கொடுப்பதற்காக பால்காரர் வந்துள்ளார். நீண்ட நேரமாகியும் அழைத்துப் பார்த்தும் யாரும் வராததால், பக்கத்து வீட்டில் இதுகுறித்து சொல்லி உள்ளார். அவர்கள் வந்து பார்த்தபோது தங்கவேல் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்தார். அருகே புஷ்பவதி இறந்து கிடந்தார். இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.