நாமக்கல்: அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இணை பொதுச்செயலாளர் பதவி வழங்க எடப்பாடி பழனிசாமி முன்வந்ததாகவும், அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் முன்னாள் அமைச்சர் தங்கமணி பரபரப்பான தகவலை வெளியிட்டிருக்கிறார். பேச்சுவார்த்தையின் போது நத்தம் விஸ்வநாதனை பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் அடிக்க பாய்ந்ததாக அவர் கூறியுள்ளார். நாமக்கல்லில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் தங்கமணி பேசினார். அப்போது பேசிய அவர், கட்சி நிலையை தெளிவுபடுத்துகிறேன். அதிமுக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். தற்போதைய நிலைய பார்த்து அதிமுக இருக்குமா?.. இரட்டை இலை இருக்குமா? என தொண்டர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.