ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் காரை கூட்ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் அடுத்த காரை கூட்ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தனியார் வங்கியின் ராணிப்பேட்டை கிளை நீண்ட நாட்களாக செயல்பட்டு வருகிறது. பணப்பரிவர்த்தனை தேவைகளுக்காக நாள்தோறும் இந்த வங்கிக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் இன்று காலை 10 மணியளவில் ஜெனரேட்டர் இருந்த மேல்தளத்தில் திடீரென புகை அதிகமாக வருவதை கண்ட காவலாளிகள் மேலே சென்று பார்த்தனர். அப்பொழுது ஜெனரேட்டர் தீப்பற்றி ஏரிந்தது.