டெல்லி : வட மாநிலங்களில் நவராத்திரி கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. முதலமைச்சரிலிருந்து சாமானியன் வரை தாண்டிய மற்றும் காப்ரா நடனம் ஆடி பண்டிகையை விமர்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். நவராத்திரி பண்டிகையின் 8-வது நாளான நேற்று ராய்பூரில் உள்ள சட்டிஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் வீட்டில் சிறப்பு பூஜைக்கு ஏற்பட்டு செய்யப்பட்டு இருந்தது. முதலமைச்சர் பூபேஷ் பாகல் பூஜையில் பங்கேற்ற பின் உற்றார் உறவினர்களுடன் ஆட்டம் பாட்டத்தில் ஈடுப்பட்டார். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அவருடன் உற்சாகமாக தாண்டிய நடனம் ஆடினர். குஜராத் மாநிலம் சூரத்தில் ஆண்கள், பெண்கள் என இருதரப்பினரும் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு தாண்டிய ஆட்டம் ஆடியது காண்போரை வெகுவாக கவர்ந்தது.