குமரி: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சந்தையில் பூக்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. தென் தமிழகத்தில் மிகவும் முக்கியமான மலர் சந்தை குமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவது வழக்கம். பண்டிகை காலங்களில் அதிக அளவில் பூக்கள் இந்த சந்தைக்கு கொண்டு வந்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள். இந்நிலையில், ஆயுதபூஜை நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. தோவாளை மலர் சந்தைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுமார் 120 டன் பூக்கள் விற்பனைக்காக வந்துள்ளன.